40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றியவர் வெங்கைய நாயுடு- புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி

இந்திய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சியாக இருந்தபோது அனைத்து தரப்பினரையும் தனது பேச்சுத் திறனால் கவர்ந்தவர் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார்.

மேலும், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியதாவது:-

வெங்கையா நாயுடு விவசாய குடும்பத்தை சார்ந்தவர். மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவர் வெற்றி பெற வேண்டும். இதுவரை துணை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அனைவருமே அரசியலில் இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். வெங்கையா நாயுடு தற்போது பொருப்பில் இருப்பதாலும் தினந்தோறும் மக்களையும் செய்தியாளர்களையும் சந்தித்து வருபவர் என்பதால் ஆக்கமும் செயல்பாடும் அதிகளவில் இருக்கும். 

மேலும், வெங்கையா நாயுடுவுக்கு தமிழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் பெரும் ஆதரவு தந்து அவரை வெற்றி அடைய செய்யவேண்டும். தமிழகத்தில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என கூறி ஆன்லைனில் விற்பனை செய்ய முன்வந்தது வரவேற்கத்தக்கது. முறைகேடுகள் அதிகளவில் நடப்பதாக புகார்கள் வருவது வருத்தமளிக்கிறது. அரசின் நோக்கம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. ஏழை எளியோர் வீடு கட்ட தட்டுப்பாடு இல்லாமல் ஓரிரு நாளில் மணல் கிடைக்கும் வகையில் மணல் விநியோகத்தை சீரமைக்க முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய ரயில் தடம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றும் கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கும் ரயில்கள் இயக்கபடாமல் இருப்பதால் தென் மாவட்ட மக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் குறிப்பாக பகல் நேரங்களிலும் இயக்க வேண்டும்.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...