வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையின் தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள புறந்தரதாசர் மண்டபத்தில் வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையின் தொடக்க விழா நடைபெற்றது. அறக்கட்டளையின் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் மற்றும் சிவக்குமார் ஆகியோர் விழாவினை துவக்கிவைத்தனர். விழாவில், எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 



விழாவில், முக்கிய நிகழ்வாக முதலில் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையும் பின்பு நாளைய வரலாறு மற்றும் ஜன்னலில் வெளிவந்த ஆசிரியை பா.பிரபாவதி அவர்களின் குறுநகை பூக்கள் புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் வெளியிட, சமூக ஆர்வலர் இளங்கோ பெற்றுக்கொண்டார். அடுத்தாக சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ரா.கனகராஜ்-யின் காணிக்கை புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை தன்னம்பிக்கை கவிஞர் கவிதாசன் வெளியிட, எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் மற்றும் பெரியமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் இளம் சாதனையாளர்களுக்கான விருதை ஜகதீஷ்க்கு வழங்கப்பட்டது.



விழாவில், சிறப்பு விருந்தினரான எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கு சுகாதாரமான மருத்துவம், அத்தியாவசியமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் கிடைத்திட வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையும் உதவவேண்டுமென வந்த அனைவரையும் வியக்கும்படி பேசினார். இறுதியில் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...