ஹூப்ளியில் இருந்து கோவைக்கு சேவையாற்றிய கங்கா மருத்துவமனையின் பறக்கும் ஆம்புலன்ஸ்

கோவை கங்கா மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பறக்கும் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த இந்த சேவைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், தமிழகத்தில் கோவையில் இதுவே முதன் முறையாகும் என்பதால் அதிகப்படியான வரவேற்பை இந்த அம்புலன்ஸ் சேவை பெற்றது. இந்த சேவை துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை ஆறு நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

இதனிடையே, ஹூப்ளியில் காயம் மற்றும் பாலித்ராமா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இளம் அனஸ்தியாலஜிஸ்ட் கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் சேவை மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.

பொதுவாக, பிற ஏர் அம்புலன்ஸ் சேவை மூலம் ஹூப்ளியில் இருந்து கோவை வர நீண்ட நேரம் மற்றும் 6 லட்சம் ரூபாய் வரை தொகை செலுத்த வேண்டும். ஆனால், கங்கா மருத்துவமனையின் இந்த சேவையில் நோயாளி 2.45 மணி நேரத்தில் கோவை வந்தடைந்தார். மேலும், மானியம் உள்ளிட்ட சலுகைகளின் அடிப்படையில் இச்சேவைக்கு 3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...