குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வெங்கய்யா நாயுடு

குடியரசு துணைத் தலைவர் போட்டி வரும் ஆக்ஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்து வரும் வெங்கய்யா நாயுடு-வை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த வெங்கய்யா நாயுடு கடந்த 2002 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்தார். 

கடந்த 2016-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்யா நாயுடு தற்போது குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த அறிவிப்பை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை வெளியிட்டார். 

வெங்கய்யா நாயுடு குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு சரியானவர் என்றும், நாளை காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் செய்தியாளர்களிடம் அமித்ஷா தெரிவித்தார்.

வெங்கய்யா நாயுடுவை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி சார்பில் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...