நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் இமேஜ் மைன்ட்ஸ் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

குன்னூர் மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு, வளிமண்டலம் ஆகியவை மாசுபடுத்துதல் குறித்தும் மேலும் இவைகளை சீர்ப்படுத்த மரங்கள் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பள்ளி மாணவர்கள் வீதி நாடகம் நடத்தி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நாடகத்தில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படுவதையும் மாணவர்கள் தங்களின் அற்புதமான நடிப்பால் வெளிப்படுதியது மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
