கோவை மாவட்டம், கணுவாய் அருகே உள்ள சோமையாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டுகெதர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாதாமாதம் முறையாக சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மாத இறுதியில் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பணப்பலன்களை தராமல் நிர்வாகம் இழுத்தடிப்பதோடு, சங்கத்தின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியே மாத ஊதியத்தை பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உட்பட அரசு துறைகளில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சம்பளத்தை பெற்றுத்தரக்கோரி மனு அளித்தனர்.
மேலும் பணப்பலன்களை தராமல் நிர்வாகம் இழுத்தடிப்பதோடு, சங்கத்தின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியே மாத ஊதியத்தை பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உட்பட அரசு துறைகளில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சம்பளத்தை பெற்றுத்தரக்கோரி மனு அளித்தனர்.