கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தக திருவிழா இன்று துவங்கியது. இதனை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூர் மருதாசல அடிகளார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முதல் விற்பனையை துவக்கி வைத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், புத்தக வாசிப்பு என்பது அனைவரிடமும் உருவாக வேண்டும். இது மாதிரியான புத்தக திருவிழாக்களால் புத்தக வாசிப்பு மக்களிடையே அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சமுக வலைதளங்களின் மூலம் வாசிக்கப்படுவது மனதில் தங்குவது இல்லை. புத்தகமாக படிக்கும்போது மன பயிற்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்றார்.
இன்று துவங்கிய இந்த புத்தக திருவிழா வரும் ஜூலை 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆன்மீகம், அறிவியல், குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட சில புத்தகங்களுக்கு 30 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ளதாக விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் தெரிவித்தார். பல்வேறு தரப்பட்ட நூல்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த புத்தக கண்காட்சி கோவை மக்களின் புத்தக வாசிப்புக்கு கிடைத்த விழாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.