கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் என்ற தனியார் நிறுவனம் பணத்தை கட்டச் சொல்லி வீட்டிற்கு வந்து அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாக காங்கேயம்பாளையம் பகுதி மக்கள் சுமார் 18 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
சிங்காநல்லூர் அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் என்ற தனியார் நிறுவனத்திடம் தொழில் துவங்க பணம் பெற்றோம். இந்நிலையில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் ராமநாதன் திடீரென இறந்துவிட்டார். இதனால், நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டாம் என வசூல் செய்யும் நபர்கள் வீட்டிற்கு வந்து கூறினர். மேலும், கடந்த 7 மாதமாக பணம் வசூலிக்க யாரும் வரவில்லை.
இந்நிலையில், அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் மீண்டும் பணம் வசூலிக்க வந்தனர். வேலையின்றி தவித்துவரும் நாங்கள் உடனடியாக பணம் செலுத்த முடியாத நிலை குறித்து விளக்கியும் அடியாட்களைக் கொண்டு வீட்டிற்கு வந்து மிரட்டிச் செல்கின்றனர். நாங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திருப்பிச் செலுத்த தயாராக உள்ளோம்.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு எங்களது வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுத்த ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் கிளை அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
சிங்காநல்லூர் அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் என்ற தனியார் நிறுவனத்திடம் தொழில் துவங்க பணம் பெற்றோம். இந்நிலையில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் ராமநாதன் திடீரென இறந்துவிட்டார். இதனால், நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டாம் என வசூல் செய்யும் நபர்கள் வீட்டிற்கு வந்து கூறினர். மேலும், கடந்த 7 மாதமாக பணம் வசூலிக்க யாரும் வரவில்லை.
இந்நிலையில், அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் மீண்டும் பணம் வசூலிக்க வந்தனர். வேலையின்றி தவித்துவரும் நாங்கள் உடனடியாக பணம் செலுத்த முடியாத நிலை குறித்து விளக்கியும் அடியாட்களைக் கொண்டு வீட்டிற்கு வந்து மிரட்டிச் செல்கின்றனர். நாங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திருப்பிச் செலுத்த தயாராக உள்ளோம்.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு எங்களது வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுத்த ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் கிளை அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.