கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும், குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் அன்னூர் எம்ஜிசி பாளையம் பகுதி மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், எம்ஜிசி பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் திட்டப் பணி துவங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. உடனடியாக திட்டப் பணியினை துவங்க வேண்டும்.
மேலும், குடியிருப்பு பகுதிக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போதுமான அளவு குடிநீர் விநியோகிப்பது இல்லை. இதுகுறித்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அருகில் உள்ள பிற கிராமங்களுக்குச் சென்று தண்ணீர் பெற்றுவரவேண்டியுள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களது பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்னூர் பகுதீ மக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், எம்ஜிசி பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் திட்டப் பணி துவங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. உடனடியாக திட்டப் பணியினை துவங்க வேண்டும்.
மேலும், குடியிருப்பு பகுதிக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போதுமான அளவு குடிநீர் விநியோகிப்பது இல்லை. இதுகுறித்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அருகில் உள்ள பிற கிராமங்களுக்குச் சென்று தண்ணீர் பெற்றுவரவேண்டியுள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களது பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்னூர் பகுதீ மக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.