துணை குடியரசு தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க வேண்டும் - வைகோ

துணை குடியரசு தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.

கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவைக்கு வருகை தந்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென அதிமுக எடுக்கும் முடிவு அவர்களது உரிமை என தெரிவித்தார். ஆனால் துணை குடியரசு தலைவர் தேர்தலில் அரசியல் கட்சியை சாராதவரும், காந்தி, ராஜாஜி பேரனுமான கோபால கிருஷ்ணகாந்தியை பாஜக அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அதிமுக எம்.பிக்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமின்றி, முழு தகுதி படைத்தவர் என்ற முறையில் வாக்களிக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள் என வைகோ தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...