அரசின் மீது தவறான கருத்துக்களை கமலஹாசன் முன்வைத்து வருவதாக துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்திற்காகவே நடத்தப்பட்டு வருகிறது. அரசின் மீது தவறான கருத்துகளை நடிகர் கமலஹாசன் முன்வைப்பதாக தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

கோவை கொடிசியா அரங்கில் வேளாண் கண்காட்சியைக் பார்வையிட்ட பிறகு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  பேசுகையில், நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை விளம்பரபடுத்துவதற்காகவே இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

அரசு நிர்வாகத்தில் எந்த துறையில், எந்த அலுவலகத்தில் ஊழல் நடப்பதை அவர் பார்த்தார். அவருடைய விஸ்வரூபம் படம் வெளி வருவதற்கு இந்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளதை அவர் மறந்துவிடக்கூடாது. இந்த அரசின் மீது தேவையில்லாத பழியை சுமத்த இது போன்ற கருத்துகளைக் தெரிவித்து வருகிறார். இதனை கமலஹாசன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...