பிக்பாஸ் ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி என எச்.ராஜா தெரிவித்தார்.

கோவையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், ஆனால் தற்போது பரப்பன அக்ரஹாரம் வரை பாய்ந்திருக்கின்றது. கர்நாடக சிறைத் துறை டிஜிபி மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கின்றது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஊழலின் மூலமாக பெற்ற பணத்தை சிறைச் சாலையிலும் சொகுசு வாழ்க்கை வாழவும் பயன்படுத்துகின்றனர். இந்த மாதிரியான சக்திகளை தமி்ழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பினை பயன்படுத்தி சில இடங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வது தெரியவந்துள்ளது. சில இடங்களில் தெரியாமல் நடக்கும் இது போன்ற தவறுகளை 3 மாதத்திற்குள் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மூன்று மாதங்களுக்கு பின்னர் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சசிக்கலாவிற்கு என தனியாக சமையல் அறை அமைத்து இருப்பது பணத்திமிறை காட்டுகின்றது. இதற்கு மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளை குற்றம் சுமத்துவது தவறானது. 

சிஸ்டம் சரியில்லை என தமிழக அரசை நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்து இருப்பது தொடர்பான கேள்விக்கு, நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி. 

நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சொல்வது தவறானது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்களும் தமிழர்கள்தான். ஊடகங்கள் மத்திய அரசுக்கும் மோடிக்கும் எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். 50 ஆண்டு காலம் ஆண்ட திராவிட கட்சிகள் தமிழர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனர்". 

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...