சதமடித்த தக்காளி விலை- இனி தக்காளி சாதம் "கட்"

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மக்களின் அன்றாட உணவில் அத்யாவசியமான ஒன்று தக்காளி ஆகும். ஒவ்வொரு உணவிலும் தக்காளி இன்றியமையாததாக உள்ளது. இதில், கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் ஒரு நாளுக்கு தக்காளி தேவை 80 முதல் நூறு லாரிகள் வரை தக்காளி தேவைப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை சரிவர லாரிகளில் வந்த தக்காளி தற்போது வெறும் 30 முதல் 40 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துவிட்டது.

அதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி, பீகார், ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விளைச்சல் குறைவானதால் அந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவை நம்பி இருந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தக்காளிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தக்காளி சந்தைக்கு புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் சந்தையுலும் தக்காளி வரத்து கடுமையாக குறைந்துவிட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

கோவையில், தற்போது தரமான தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயிக்கு விற்கப்படுவது சிறு, குறு நடுத்தர வர்க்கத்தினரை மேலும் இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. 

ஜிஎஸ்டி உயர்வு, பெட்ரோல் விலையில் அன்றாட மாற்றம், வறட்சி என்று அன்றாடம் பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு தற்போது காய், கறிகளின் விலை உயர்வும் பேரடியாக அமைந்துள்ளது.

இனிமேல் வெங்காயம் வெட்டினால் மட்டுமல்ல, தக்காளிக்கும் கண்ணீர் வடியும்...

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...