கோவையில் போலி மருத்துவர்கள் இருவர் கைது


கோவையில் கடந்த 20 ஆண்டுகளாக உரிய சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

கோவை மாவட்டம், ஆலாந்துரை பகுதியில் மருத்துவத்தில் நுட்பம் பயின்ற சான்றிதழைக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த ஆறுமுகராஜ் என்பவரை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 



பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஆறுமுகராஜிடம் உரிய சான்றிதழ்கள் இல்லாதது தெரியவந்தது. இதனை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவர் மீது Ipc 419, 468,471 மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் பிரிவு 15, இந்திய மருந்துகள் மத்திய கவுன்சில் சட்ட பிரிவு 17 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறுமுகராஜை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



இதேப்போல், தொண்டாமுத்தூர் அடுத்த உலியம்பாளையம் பகுதியில் கலைவாணி கிளீனிக் என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த கலைவாணி என்ற பெண்ணின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய கிளீனிக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தன்னிடம் உரிய ஆவணம் உள்ளதாக கலைவாணி தெரிவித்ததை அடுத்து அவரை காவல் நிலையத்தில் ஆவணங்களுடன் ஆஜராக காவல்துறையினர் அறிவுறுத்தினர்.



ஆனால், அவர் சான்றிதழ்களை ஒப்படைக்காததால் தொண்டாமுத்தூர் காவல்நிலைய போலீசார் வசம் பதிவு செய்து மோசடி பெண்ணான கலைவாணியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...