வேளாண் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

கோவை மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க நடப்பாண்டிற்கு (2017- 2018) 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைந்தளவே மழைப்பொழிவை தந்ததால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அணைகள், குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டன.

நீர் நிலைகளிலும் நீர் இருப்பு இல்லாததால் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இவ்வாறு வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வறட்சியினால் விவசாயிகள் பாதிக்காமல் இருந்திடும் வண்ணம் பயிர் மேலாண்மைக்கு சொட்டுநீர் பாசனத்தின் அவசியமும், பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு தெரியதொடங்கியுள்ளது. இந்நிலையில் வேளாண், தோட்டக் கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு கரும்பு 190 எக்டர், பருத்தி 25 எக்டர், தென்னை 500 எக்டர், மக்காச்சோளம் மற்றும் இதர பயிர்களுக்கு 100 எக்டர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்துக்கு 400 எக்டரும் சேர்த்து மொத்தம் 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளுக்கு 60 சதவிகிதம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கு 40 சதவிகிதமும் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 70 சதவிகிதம் மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

சொட்டுநிர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில உரிமைச்சான்று, ரேஷன்காட்டு, ஆதார் எண், நீர் ஆய்வு அறிக்கை மற்றும் சிறுகுறு விவசாயி சான்றுடன் வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மேலும் தகவலுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், லாலிரோடு, கோவை- 13. தொலைபேசி எண் 0422- 2432739 தொடர்புகொள்ளலாம்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...