சேலம் இதழியல் மாணவி மீது வழக்கு - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்


ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மக்கள் மத்தியில் துண்டுபிரசுரங்களை வழங்கிய சேலம் இதழியல் மாணவி மீது வழக்கு பதிந்திருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளின் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் மக்கள் விரோத திட்டத்திற்கு எதிராகவும் துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் மத்தியில் விநியோகித்த பொழுது, இதழியல் படித்து வரும் கல்லூரி மாணவி வளர்மதி மற்றும் ஜெயந்தி ஆகிய இருவரையும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் போலீசார் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

ஜனநாயக அரசியல் அமைப்பில் மக்களுக்கும், தேச நலன்களுக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிராக மத்திய மாநில அரசுகள் செயல்படுகிறபோது அதை, வாக்களித்த மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிற உரிமை, ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இது அரசியல் சாசன ரீதியிலான உரிமையாகும். இதற்கு எதிராக போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்திருப்பது சட்டவிரோதமான அத்துமீறலாகும்.

அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...