வாகன ஓட்டிகளுக்கு வலுக்கும் கட்டுப்பாடுகள்...!

விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அனைத்து செயலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கும் கோவை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சாலைப் பாதுகாப்பு குழுவினரால் நிர்ணயிக்கப்பட் வேக அளவை விட அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிவப்பு விளக்கு சமிக்கையை மதிக்காமல் வாகனத்தை இயக்குதல், சரக்கு வாகனத்தில் நிர்ணயிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதல் சுமையை ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், மதுபோதையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை போக்குவரத்து ஆணையர், கோவையில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு கீழ்க்கண்ட இடங்களில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.

  • அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்தல்.
  • தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியினை விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக வழங்குதல்.
  • பொது மக்களிடம் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை மூலமாக செயலாக்க பணியினை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.


அதன்படி, இன்றைய தினம் முதற்கட்டமாக காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களிலும் இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படும் என கோவை வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...