ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக சி.ஐ.டி.யூ சார்பில் காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி துப்புரவு, டெங்கு பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் என நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வருகிறார்கள். சமீப மாதங்களாக இவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குவதில்லை. இது சம்மந்தமாக பலகட்டங்களாக நேரிலும் கடிதம் மூலமும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவதும் எவ்வித நடவடிக்கை இல்லததால், இது சம்மந்தமாக ஒப்பந்ததாரர்களிடம் பேசம் பொழுது எங்களுக்கு உரிய காலத்தில் இருந்து எங்களுக்கு பில்லிற்கான தொகை கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர். 

எனவே, மேற்கண்ட பணியாளர்களுக்கு, முதன்மை வேலையளிப்பவர் என்ற முறையில் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு இன்று காலை அடையாள வேலை நிறுத்தம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதியிடம் தங்கள் பிரச்சனையை கூறினார். இதற்கு முறையான நடவடிக்கை எடுத்து நாளைமறுநாளில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...