'நோ பார்க்கிங்'-ல் நின்ற போலீஸ் வண்டிக்கு பூட்டு


கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அத்தகைய இடங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் சார்பில் 'நோ பார்க்கிங்' பலகை வைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பை மீறி அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்வோரிடம் போலீசார் அபராதம் விதித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.



இந்தநிலையில், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் நின்ற போலீசாரின் வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் பூட்டு போட்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது.



கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புறம் கோவை மாநகர போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்' பலகை வைத்துள்ளனர். ஆனால், இன்று அப்பகுதிக்கு வந்த காவல்துறை வாகனம் ஒன்று அறிவிப்பு பலகைக்கு முன்புறமே வாகனங்களை நிறுத்திச் சென்றனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்'-கில் நின்ற கார்களின் சக்கரங்களுக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து, அருகில் நின்ற போலீசாரின் வாகனத்தின் சக்கரங்களுக்கும் பூட்டு போட்டுச்சென்றனர். ஆனால், பூட்டிய சில நிமிடங்களிலேயே அந்த பூட்டு அகற்றப்பட்டது.



'நோ பார்க்கிங்'-யில் நின்ற வாகனம் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சொந்தமான வாகனம் என்று கூறப்படுகிறது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...