வீட்டுமனை பட்டா கேட்டு சாட்டையடித்தபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாடோடிகள்

கோவை காந்திபார்க் பகுதியில் சாட்டையடித்து பிழைப்பு நடத்தும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் சாலையோரம் வசித்து வருகின்றனர்.



இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாட்பாரம் மற்றும் சுற்று பகுதிகளில் வசித்து வரும் நிலையில் தாங்கள் குடிசை அமைத்து வாழ ஏதாவது ஒரு இடத்தில் மாவட்ட நிர்வாகம் இடம் வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளனர்.



இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு குடும்பம் சகிதமாக வந்தவர்கள் நுழைவுவாயில் முன்பு சாட்டை அடித்து ஆடி உடனடியாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். பெண்கள் குளிப்பதற்கோ உடை மாற்றுவதற்கோ மறைவிடம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். தங்களுக்கு பட்டா ஒதுக்கீடு செய்து இருப்பிடத்திற்கு வழி செய்து தர வேண்டும். 

மேலும் தங்களுடைய வருங்கால சந்ததிகள் தாங்கள் செய்து வரும் சாட்டியடியை கைவிட்டு கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். தங்களது சமூகத்தில் முன்னோடியாக ஒரு இளைஞர் கல்லூரி படிப்பை முடித்து தற்போது அரசு தேர்விற்கு பயின்று வருகிறார். தங்களுடைய சமூகம் மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள நிலையில் பிளாட்பாரங்களில் தங்குவதால் மற்றவர்கள் தங்களை ஏளனமாக பார்ப்பது வேதனையளிக்கிறது என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...