கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியில் பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேட்டாப் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரகுமார். இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை 11 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு உடையாம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இரவு 10 மணியளவில் திரும்பி வந்து வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் பின்பக்கமாக சென்று பார்த்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைக்கண்டு அதிச்சியடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் மற்றும் நொருக்குத் தீணிகளை கொள்ளை அடித்தவர்கள் சாவுகாசமாக அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பின் குழந்தையின் பள்ளி புத்தக பையில் வைத்து திருடிய நகை, பணம், லேப்டாப் போன்றவற்றை எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு ராஜேந்திர குமார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் கைரேகை நிபுணர்களைக் கொண்டு அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, பணம், லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரகுமார். இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை 11 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு உடையாம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இரவு 10 மணியளவில் திரும்பி வந்து வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் பின்பக்கமாக சென்று பார்த்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைக்கண்டு அதிச்சியடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் மற்றும் நொருக்குத் தீணிகளை கொள்ளை அடித்தவர்கள் சாவுகாசமாக அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பின் குழந்தையின் பள்ளி புத்தக பையில் வைத்து திருடிய நகை, பணம், லேப்டாப் போன்றவற்றை எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு ராஜேந்திர குமார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் கைரேகை நிபுணர்களைக் கொண்டு அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, பணம், லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.