வீட்டிலிருந்த நொருக்குத் தீணிகளை தின்றுவிட்டு ஹாயாக பொருட்களை திருடிச் சென்ற கொள்ளையர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியில் பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேட்டாப் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரகுமார். இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை 11 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு உடையாம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு 10 மணியளவில் திரும்பி வந்து வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் பின்பக்கமாக சென்று பார்த்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைக்கண்டு அதிச்சியடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் மற்றும் நொருக்குத் தீணிகளை கொள்ளை அடித்தவர்கள்  சாவுகாசமாக அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பின் குழந்தையின் பள்ளி புத்தக பையில் வைத்து திருடிய நகை, பணம், லேப்டாப் போன்றவற்றை எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு ராஜேந்திர குமார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் கைரேகை நிபுணர்களைக் கொண்டு அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, பணம், லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...