தண்ணீர் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் சலவை தொழிலாளர்கள் மனு

தண்ணீர் இல்லாத காரணத்தால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கபட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று சலவை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இடையர் வீதி கன்னட வன்னார் சந்து பகுதி சலவை தொழில் செய்து வரும் மக்கள் கூறியதாவது :-

தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாடு காரணமாக வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கபட்ட டோபிகானாவில் 50-ம் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் சலவை தொழில் செய்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக தண்ணீர் கிடைக்க பெறாத காரணத்தால் சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி தொகை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். 

எனவே, தாங்கள் பணி செய்து வரும் டோபிகானா அருகே போர்வெல் அமைத்து தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலை சீராகும் வரை தங்களது குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...