கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று 22-வது வார களப்பணியாக கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த களப்பணியில் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்டு 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, பத்தொன்பதாவது வார களப்பணியில் தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் வீசும் பணி நடைபெற்றது. இதில், வாளையார் வனத்துறைக்குட்பட்ட வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று விதைப்பந்துகளை வீசினர். மேலும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினருடன் இன்று புதியதலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழுவினரும் களப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த களப்பணியில் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்டு 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, பத்தொன்பதாவது வார களப்பணியில் தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் வீசும் பணி நடைபெற்றது. இதில், வாளையார் வனத்துறைக்குட்பட்ட வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று விதைப்பந்துகளை வீசினர். மேலும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினருடன் இன்று புதியதலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழுவினரும் களப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.