மதுக்கரையில் முறைகேடாக விற்கப்படும் மதுபானங்கள்- பொதுமக்கள் அவதி

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், பார்களையும் கடந்த மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் இவ்வாறாக செயல்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மேலும், பல கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மாற்றப்பட்டன. இந்நிலையில், சிலர் மதுபானங்களை முறைகேடாக விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக, கோவை மாவட்டம், மதுக்கரைக்கு உட்பட்ட பகுதியில் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை, அதன் எதிரே உள்ள பெட்டிக் கடை உள்ளிட்டவற்றில் மதுபானங்கள் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்புறம் மூடிய நிலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையின் பின் வாசல் பகுதியிலும், அருகிலும் சிலர் முறைகேடாக மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த மதுக்கடையின் எதிரே உள்ள பெட்டிக் கடையிலும், சிலர் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் சாலையிலும் அமர்ந்து மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி, அதற்கு மேலும் விற்பனை நடைபெறுவதாகவும், மதுக்கடையினை விட வெளியில் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் மதுகுடிக்க வருவோரால் அன்றாடம் பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. தொடர்ந்து, இதுபோன்ற முறைகேடான மதுபான விற்பனை நடைபெற்றால் அடுத்தகட்டமாக மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்படும்' என தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...