இளைஞர் திறன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவையில் நாளை துவக்கம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி இளைஞர் திறன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை திறன் வாரமாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட மாணவ, மாணவியர்களும், இளைஞர்களும் திறன் பயிற்சி பெறுவதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உதவிடும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இவ்வாரத்தில் பல்வேறு நிகழ்ச்சியை மாவட்ட வேலைவாப்பு அலுவலகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சியாக 10ம் தேதியன்று (நாளை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் திறன் பயிற்சி குறித்து விரிவாக விளக்கப்பட்டு, திறன் பயிற்சிக்கான பதிவுகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறந்த எதிர்காலம் அமைய திறன்பயிற்சி என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா, ஓவியப் போட்டி ஆகியன நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதிநாளான ஜூலை 15ம் தேதியன்று மாவட்ட ஆட்சியரால் பரிசுகள் வழங்கப்படும். 

இவ்வாரத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறன் விழிப்புணர்வு குறித்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. திறன் பயிற்சி குறித்து விரிவாக அறியவும், பதிவு செய்யவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தையும் நேரில் அணுகி பயனடையலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி திறன் பயிற்சி பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...