கோவை ஆலந்துரையை அடுத்த பூலுவபட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாலிபால் போட்டியில் பங்கேற்றனர். தொடர்ந்து நண்பர்களின் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டுள்ளது.
அப்போது சிவா (50) என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவா-வின் மகன் சுரேந்திர குமார் (25) தனது நண்பரும், இந்து முன்னணியின் மாநகர மாவட்ட செயலாளருமான ரமேஷ் குமார் (29) என்பவருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரமேஷ் குமார் அப்பகுதியைச் சேர்ந்த சுமன் (34) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மரக்கட்டையால் ரமேஷ்குமார் பலமாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார்.
தகவலறிந்த இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியதில் சுமனும் படுகாயமடைந்தார். தொடர்ந்து, இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது சிவா (50) என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவா-வின் மகன் சுரேந்திர குமார் (25) தனது நண்பரும், இந்து முன்னணியின் மாநகர மாவட்ட செயலாளருமான ரமேஷ் குமார் (29) என்பவருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரமேஷ் குமார் அப்பகுதியைச் சேர்ந்த சுமன் (34) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மரக்கட்டையால் ரமேஷ்குமார் பலமாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார்.
தகவலறிந்த இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியதில் சுமனும் படுகாயமடைந்தார். தொடர்ந்து, இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.