வால்பாறை நகர பகுதியில் செயல்பட்டு வந்த 5 அரசு மதுபானக் கடைகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்டன. ஆனால், தற்போது அந்த கடைகள் செயல்பட்டு வந்த இடத்தில் தனிநபர்கள் சிலர் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சிலர் வெளிபகுதியில் மதுபானங்களை அதிகளவில் வாங்கி வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, மதுபானக் கடையில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபானம் தற்போது 200 முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அன்றாடம் ரூ.234 ஊதியம் பெறும் தோட்டத் தொழிலாளர்கள் 250 ரூபாயினை மதுபானத்திற்காக செலவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, வால்பாறை காவல்துறை ஆய்வாலர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வால்பாறை அனைத்துக் கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலர் வெளிபகுதியில் மதுபானங்களை அதிகளவில் வாங்கி வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, மதுபானக் கடையில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபானம் தற்போது 200 முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அன்றாடம் ரூ.234 ஊதியம் பெறும் தோட்டத் தொழிலாளர்கள் 250 ரூபாயினை மதுபானத்திற்காக செலவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, வால்பாறை காவல்துறை ஆய்வாலர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வால்பாறை அனைத்துக் கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.