கோவை மாநகராட்சி பள்ளியில் முதல்முறையாக சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



கோவையில் முதல்முறையாக மாநகராட்சி பள்ளியில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்க, 2013-ம் ஆண்டில் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம், 4.5 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியிலுள்ள கால்பந்து மைதானத்தை மாற்றி அதற்கு பதிலாக ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது.

2015ல் துவங்கிய இந்த பணி, தற்போது சுறுசுறுப்பாக நடக்கிறது. இதற்காக, 'ஆஸ்ட்ரோ டர்ப்' எனப்படும் செயற்கை புல் மைதானம் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகிறது. சர்வதேச தர ஹாக்கி விளையாட்டுக்கு 91.4 மீட்டர் நீளம், 55 மீட்டர் அகலமான இடம் தேவை. ஆனால், தற்போது 100 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலமாக போதுமான இடம் உள்ளதால் சுற்றிலும் காலரி அமைக்கவும் வசதி உள்ளது. இப்பணியை, தற்போது தில்லி சின்காட்ஸ் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். 



அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் இதுகுறித்து கூறுகையில், ''6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது. மைதானத்தை சுற்றிலும் நீர் வடிகால் அமைக்கப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் இந்த பணியும் முடிந்து விடும். இதற்கு பின், மைதானத்தில் பாலியுரேதீன் என்ற கலவை ஊற்றப்படும். ஏற்கனவே தயார் நிலையில் உள்ள 'ஆஸ்ட்ரோ டர்ப்' மைதானம் முழுவதும் விரிக்கப்படும். அடுத்த சில வாரங்களில் மைதான பணி சிறப்பாக முடியும்,'' என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...