மணல் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வஉசி மைதானம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு குழுவினர் இன்று பேரணி நடத்தினர்.

மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று ஒருநாள் மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வமைப்பினர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வஉசி மைதானம் வரை பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்றனர்.

அப்போது கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு பேசுகையில், அரசு மணல் குவாரிகளில் போதியளவு மணல் கிடைப்பதில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது. மணல் தட்டுப்பாடு நிலவுவதால் மணல் மற்றும் எம்.சாண்ட் மணல் விலையும் அதிகரித்துள்ளது. எம்.சாண்ட் மணல் போதியளவு கிடைக்கவில்லை. மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று ஒருநாள் மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வமைப்பினர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வஉசி மைதானம் வரை பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்றனர்.

அப்போது கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு பேசுகையில், அரசு மணல் குவாரிகளில் போதியளவு மணல் கிடைப்பதில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது. மணல் தட்டுப்பாடு நிலவுவதால் மணல் மற்றும் எம்.சாண்ட் மணல் விலையும் அதிகரித்துள்ளது. எம்.சாண்ட் மணல் போதியளவு கிடைக்கவில்லை. மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.