கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்யக்கூடாது- ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்


கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் ஜலேந்தரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 60-க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இதுநாள் வரையில் அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை. இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் உடல் நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்தார். ஆனால், கோவை மாநகராட்சி சார்பில் அந்த நபரின் குடும்பத்திற்கு உக்கடம் பகுதியில் தொழில் துவங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் வழங்காத அரசு, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கும் எவ்வித நிவாரணமும் வழங்க கூடாது'. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...