கதிராமங்கலம் மக்கள் மீதான தடியடிக்கு தமிழக முதலமைச்சரின் பதில் பொறுப்பற்றதாக உள்ளது- நாம் தமிழர் சீமான்


கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



கதிராமங்கலத்தில் போராடிய பொது மக்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் பதில் பொறுப்பற்றதாக உள்ளது. வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடும் மக்களுக்கு அரசு துணை நிற்காமல் நேர் எதிராக செயல்படுகின்றது. கதிராமங்கலத்திற்குள் தங்களை நுழைய விடவில்லை என்றாலும் மற்ற இடங்களில் நாங்கள் போராடுவோம். பொது கூட்டங்களில் இதுகுறித்தான கோரிக்கைகளை முன்வைப்போம்.

ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டு வேலை நிறுத்தம் மேற்கொண்டு வரும் திரையரங்க உரிமையாளர்களின் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிடிஎச் மூலம் திரைப்படங்களை  தமிழக அரசே முன்நின்று வெளியிட வேண்டும். டிடிஎச் மூலம் படங்கள் வெளியிட்டால் அதில் பல முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது. ஏற்கனவே இயக்குனர் சேரன் முயற்சித்தும் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

கொடநாட்டில் நடைபெறும் சம்பவங்கள் திகில் படம் போல் போய்க்கொண்டு இருக்கிறது. பத்திரிகைகளில் படிக்க சுவாரஷ்யமாக இருக்கிறது. மேலும், ஜெயலலிதா இருந்த போது இருந்ததை விட தற்போது தமிழக அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்னர். பொது வெளியில் தைரியமாக பேசுகின்றனர்."

இவ்வாறு நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...