கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த 91.61 சென்ட் நிலம் மீட்பு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 91.61 சென்ட் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்க்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி கிராமம், வார்டு எண்.28, எம்.வி சாமி நகர் பகுதியில் அமைந்துள்ள, 10 சென்ட் பரப்பளவும், 80 லட்சம் மதிப்பும் கொண்ட பொது ஒதுக்கீடு இடத்தில், இளங்கோ என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த ஷெட் அகற்றி மாநகராட்சி இடம் கையகப்படுத்தப்பட்டது.

மேலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி கிராமம், வார்டு எண்.36, வி.ஆர். கார்டன் பகுதியில் உள்ள 34 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வீரகேரளம் கிராமம், வார்டு எண்.18, மகாராணி அவன்யூ -1 எக்ஸ்டென்சன் பகுதியில் உள்ள 33.16 சென்ட் பரப்பு மற்றும் வார்டு எண்.19 சிவகாமி நகர் பகுதியில் உள்ள 9.45 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி கிராமம், வார்டு எண்.100, ஹவுசிங் யூனிட்டில் 5 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 91.61 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள் சுத்தம் செய்து, பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.25 பூமார்க்கெட் பகுதியல் உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு சம்பந்தமாக, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் அடிப்படையில் நகரமைப்பு பிரிவில் பணிகள் மேறக்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...