சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை பாதுகாக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள கோவையின் சுற்றுசுழல் ஆர்வலர்கள்.


வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையை சேர்ந்த சுற்றுசுழல் ஆர்வலர்கள் பல்வேறு மாநிலங்களில் வழியாக 60 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் சேவைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வனத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம், விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காரிலேயே இந்தியா, நேபால், பூட்டான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு கோவையை சேர்ந்த நான்கு சுற்றுசுழல் ஆர்வலர்கள் 29 மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

மொத்தம் 28 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு காரிலேயே சென்று பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். மொத்தம் அறுபது நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள இவர்கள் காடுகள் வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். கோவையில் உள்ள வனக்கல்லூரியில் இருந்து இன்று இவர்கள் பயணத்தை துவங்கினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...