வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையை சேர்ந்த சுற்றுசுழல் ஆர்வலர்கள் பல்வேறு மாநிலங்களில் வழியாக 60 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் சேவைகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வனத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம், விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காரிலேயே இந்தியா, நேபால், பூட்டான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு கோவையை சேர்ந்த நான்கு சுற்றுசுழல் ஆர்வலர்கள் 29 மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
மொத்தம் 28 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு காரிலேயே சென்று பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். மொத்தம் அறுபது நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள இவர்கள் காடுகள் வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். கோவையில் உள்ள வனக்கல்லூரியில் இருந்து இன்று இவர்கள் பயணத்தை துவங்கினர்.