மதுரை, பாண்டிகோயில் அம்மா திடலில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு தொடக்க விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குதுவிளகேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பின்னர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு தொடக்க விழாவில் சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி; புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மதுரை மாநகராட்சியின் எதிர்கால குடிநீர் தேவையினை கருத்தில் கொண்டு இன்னும் 60 ஆண்டுகளுக்கு மதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடே நிலவக் கூடாது என்று தொலைநோக்கு திட்டத்தோடு அம்மா அவர்கள் விரும்பியபடி புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் மிகவும் நேசித்த மதுரை மாநகருக்கென சிறப்பு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டம் சுமார் 156 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரியார் அணை லோயர் கேம்ப் பகுதியிலிருந்து பெரிய ராட்சத குழாய்கள் மூலம் சுமார் 17 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என்பதை இந்த தருணத்தில் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது. இதில், சட்டபேரவைத் தலைவர் தனபால், மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி; புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மதுரை மாநகராட்சியின் எதிர்கால குடிநீர் தேவையினை கருத்தில் கொண்டு இன்னும் 60 ஆண்டுகளுக்கு மதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடே நிலவக் கூடாது என்று தொலைநோக்கு திட்டத்தோடு அம்மா அவர்கள் விரும்பியபடி புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் மிகவும் நேசித்த மதுரை மாநகருக்கென சிறப்பு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டம் சுமார் 156 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரியார் அணை லோயர் கேம்ப் பகுதியிலிருந்து பெரிய ராட்சத குழாய்கள் மூலம் சுமார் 17 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என்பதை இந்த தருணத்தில் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது. இதில், சட்டபேரவைத் தலைவர் தனபால், மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.