வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் சில தொழிற் சங்கங்களால் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். கேரளா மாநிலத்தில் தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலியாக ரூபாய் 500 வரை கேரளா அரசு வழங்கி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலி உயர்த்தி தருவதாகக் கூறி வாக்குறுதி அளித்தனர். அதனை பெரிதும் நம்பிய அவர்கள் வயிற்று பிழைப்புக்காக கடும் மழையிலும், பனியிலும், யானை, சிறுத்தை, புலி போன்ற காட்டு மிருகங்களின் தொல்லையிலும் அடிமை போல் வாழ்க்கை வாழும் அவலம் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் சில தொழிற் சங்கங்களால் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்தது. எனவே, தேயிலை தொழிலாளர்களுக்கு உரிய சம்பள வழங்கக்கோரி நிர்வாகத்துடன் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் என தேயிலை தொழிலாளர்களின் எதிர்பார்பாக உள்ளது.

இதனை தொடர்ந்து, வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் சில தொழிற் சங்கங்களால் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்தது. எனவே, தேயிலை தொழிலாளர்களுக்கு உரிய சம்பள வழங்கக்கோரி நிர்வாகத்துடன் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் என தேயிலை தொழிலாளர்களின் எதிர்பார்பாக உள்ளது.