கோவை மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு வாரம் வரும் ஜூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதன் முதன் நிகழ்ச்சியாக ஜூலை 3ம் தேதியன்று மாணவ, மாணவியர் கலந்துகொள்ளும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார்.
இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குதிரைப் பந்தய சாலை வழியாக சென்று அரசினர் கலைக் கல்லூரியை சென்றடையும்.
இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 4ம் தேதியன்றும், கிணத்துக்கடவு டிஇஎல்சி சீனியர் பெர்ஜென்டல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 5ம் தேதியன்றும், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 6ம் தேதியன்றும், தொடர்ந்து, ஆர்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 7ம் தேதியன்றும் தொழில்நெறி வழிகாட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறும்.
மேலும், இந்நிகழ்ச்சிகளுடன் தாலுகா தலைமையிடங்களிலும் நடமாடும் பிரச்சார வாகனம் மூலம் தொழில்நெறி வழிகாட்டும் பிபிடி, பேனர்கள் மற்றும் சார்ட்டுகள் மூலம் விழிப்பணர்வு ஏற்படுத்தப்படும். உள்ளூர் பண்பலைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.
கோவை மாவட்ட இளைஞர்கள் மேற்காணும் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குதிரைப் பந்தய சாலை வழியாக சென்று அரசினர் கலைக் கல்லூரியை சென்றடையும்.
இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 4ம் தேதியன்றும், கிணத்துக்கடவு டிஇஎல்சி சீனியர் பெர்ஜென்டல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 5ம் தேதியன்றும், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 6ம் தேதியன்றும், தொடர்ந்து, ஆர்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 7ம் தேதியன்றும் தொழில்நெறி வழிகாட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறும்.
மேலும், இந்நிகழ்ச்சிகளுடன் தாலுகா தலைமையிடங்களிலும் நடமாடும் பிரச்சார வாகனம் மூலம் தொழில்நெறி வழிகாட்டும் பிபிடி, பேனர்கள் மற்றும் சார்ட்டுகள் மூலம் விழிப்பணர்வு ஏற்படுத்தப்படும். உள்ளூர் பண்பலைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.
கோவை மாவட்ட இளைஞர்கள் மேற்காணும் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.