ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜிஎஸ்டி குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.

கோவை பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் வணிகவரித்துறை அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்தப் பேரணி வஉசி பூங்கா வரை சென்று நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துவோர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜிஎஸ்டி குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.

கோவை பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் வணிகவரித்துறை அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்தப் பேரணி வஉசி பூங்கா வரை சென்று நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துவோர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
