வெருளி திரைப்படத்தின் லாபத்தின் ஒரு பகுதியை சமூகத்திற்கு செலவிடவுள்ளதாக அந்த படத்தின் இயக்குனர் அமுதவாணன் தெரிவித்தார்.

வெருளி திரைப்படத்தின் வெற்றி விழா கோவை கேஜி திரையரங்கில் இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக படத்தின் இயக்குனர் அமுதவாணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெருளி திரைப்படம் 99 சதவித இந்திய மக்களின் அனுபவத்தை உள்ளடக்கியது. நம்மில் பெரும்பாலானோர் இந்த அனுபவத்தை பெற்றிருப்பர்.

பணம் சம்பாதிப்பதற்காக திரைப்படம் இயக்கவில்லை. சமூகத்திற்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை இயக்கியுள்ளேன்.
படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை கரு குறித்த பிரச்சனையை வைத்து சமூக பணிகளுக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செலவிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

வெருளி திரைப்படத்தின் வெற்றி விழா கோவை கேஜி திரையரங்கில் இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக படத்தின் இயக்குனர் அமுதவாணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெருளி திரைப்படம் 99 சதவித இந்திய மக்களின் அனுபவத்தை உள்ளடக்கியது. நம்மில் பெரும்பாலானோர் இந்த அனுபவத்தை பெற்றிருப்பர்.

பணம் சம்பாதிப்பதற்காக திரைப்படம் இயக்கவில்லை. சமூகத்திற்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை இயக்கியுள்ளேன்.
படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை கரு குறித்த பிரச்சனையை வைத்து சமூக பணிகளுக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செலவிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.