சரக்குகள் மற்றும் சேவை வரிகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள், வணிகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வழக்குரைஞர்கள், விற்பனை வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆகியோர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது.
கோவை கோட்ட வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஜூன் 30ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு பேரணி வணகவரித்துறை வளாகம் அமைந்துள்ள டாக்டர் பாலசுந்தரம் சாலையில் துவங்கி காந்திபுரம், கிராஸ்கட் சாலை, டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் அவினாசி சாலை வழியாக வணிகவிரித்துறை வளாகம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பேரணியில் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பிக்க உள்ளனர்.
கோவை கோட்ட வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஜூன் 30ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு பேரணி வணகவரித்துறை வளாகம் அமைந்துள்ள டாக்டர் பாலசுந்தரம் சாலையில் துவங்கி காந்திபுரம், கிராஸ்கட் சாலை, டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் அவினாசி சாலை வழியாக வணிகவிரித்துறை வளாகம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பேரணியில் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பிக்க உள்ளனர்.