ராஜவாய்க்காலில் மூன்றுவார கால தூய்மை பணியினை வீணடித்த கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் மூன்றுவார கால தூய்மை பணி வீணா ? கோவை மாவட்ட நிர்வாகம் மெத்தனம்

கோவை நொய்யல் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 28 குளங்கள், 20 தடுப்பணைகள் உள்ளன. ஆறு, குளங்கள், பாசன வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நேரிடையாக பாசன வசதி பெறுகிறது.

1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் பாயும். அப்போது குளங்களுக்கு நீர் திறக்கப்படுகிறது. நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ளலூர் குளத்திற்கு பாயும் 8 கி.மீ நீளம் கொண்ட ராஜ வாய்க்கால், குனியமுத்தூர் குளத்திற்கான ராஜ வாய்க்கால், பேரூர் ராஜ வாய்க்கால் போன்றவை பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இதில் ஆக்கிரமிப்பில் இருந்த நொய்யல் ராஜ வாய்க்கால்களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



வெள்ளலூர் ராஜ வாய்க்கால் அடைப்பினாலும், ஆக்கிரமிப்பினாலும் போதுமான அளவு நீர் பாயவில்லை. கடந்த 16 ஆண்டுகளில் இந்த குளம் 45 சதவிகிதம் மட்டுமே நிரம்பியது. கடந்த 2009-ம் ஆண்டில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து குளங்களும் நிரம்பின. ஆனால் வெள்ளலூர் குளத்திற்கு நீர் பாயவில்லை. 

இந்த குளத்திற்கு சுண்ணாம்பு கால்வாயிலிருந்து செல்லும் வாய்க்கால் மூலமாக நீர் செல்லவேண்டியிருக்கிறது. ராஜ வாய்க்கால் கரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் தற்போது உள்ளது. 



கேவையில் பல்வேறு குளங்களை சிரமைத்து வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள், மண் திட்டுக்கள், பிளாஸ்டிக் மற்றும் புதர்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பருவமழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் இந்த வாய்க்கால் பகுதியினை சுத்தம் செய்வதில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.



குறிப்பாக, இந்த வாய்க்கால் கரையோரப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு சுமார் 1800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதனை அகற்றி மாற்று இடத்தில் அப்பகுதி மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்று இடத்தில் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், தற்போது வரை ராஜவாய்க்கால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றினால் மட்டுமே தற்போதைய பருவமழையில் மழை நீர் சேகரமாகும்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...