ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணரும் வருமான வரித்துறை அதிகாரிகள்!

ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்களை பாதுகாக்கும் தரவு மறையாக்கம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் திணறியதால் பொதுமக்களின் குழப்பங்கள் தீர்க்க முடியாத நிலையே நிலவுகிறது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கான ஜிஎஸ்டி பயிலரங்கம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சேலம் மண்டல மத்திய கலால் வரித்துறை ஆணையர் கண்ணன், கோவை மண்டல துணை ஆணையர் கோவிந்தராஜ், பட்டய கணக்காளர் முரளி உள்ளிட்ட வருமானத்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் ஜிஎஸ்டி குறித்து மக்களிடையே சாதகமான அம்சங்களை மட்டும் வெளியிடுமாறு வலியுறுத்தினர்.



அப்போது, ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்களை டேட்டா என்கிரிப்சன் எனப்படும் தரவு மறையாக்கம் செய்வது எப்படி என பத்திரிகையாளர் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள் தொழில்நுட்ப கேள்விகளுக்கு தற்போதைக்கு தங்களிடம் பதில் இல்லை என தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி தகவல்களின் பாதுகாப்பு பணிகள் 49 சதவீதம் அரசிடமும் 51 சதவீதம் எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமும் உள்ளது. இதனால், தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பில்லை எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 8 அம்ச தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், ஜிஎஸ்டி வரியில் 20 சதவிகித பொருட்கள் மட்டுமே விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், மீதமுள்ள 80 சதவிகித பொருட்கள் விலை உயர வாய்ப்பில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என கணிக்க முடியாது. தற்போது விலை உயர்வு ஆண்டுக்கு 2.18 சதவிகிதம் அளவிற்கு உள்ளது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுவதால் இந்த விலை உயர்வு 3.5 சதவிகிதம் மட்டுமே உயர வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தற்போது இந்திய அரசு 64 பிட் என்கிரிப்சனும், வாட்ஸ் ஆப் 128 பிட் என்கிரிப்சனும் பாதுகாப்பு அம்சங்களாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...