கோவையில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள நல உதவிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோவை மாவட்டத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து புதுடெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையிலும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் புதுடெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தாழ்த்தப்பட்டோர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் அறிவிக்கப்படும் திட்டங்களை உரிய முறையில் கொண்டு சேர்ப்பது அரசுத்துறை அலுவலர்களது முக்கிய பங்கு ஆகும். மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவைச்சார்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் கோரப்படும் புசழரி-கள் அவர்களது விருப்பத்திற்கேற்ப வழங்கப்படுதல் வேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவைச்சார்ந்த மாணவ, மாணவியற்கும் பள்ளிகளில் சேர்க்கையின் போது முன்னுரிமை அளித்திடவும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து சலுகைகளும் எவ்வித தடங்கலுமின்றி சேருதல் வேண்டும்.

அதேபோல், விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என அடிக்கடி மாவட்டத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தேவைப்படும் வசதிகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி அடிப்படை வசதிகள் பெற்று தருவதில் முனைப்பாக செயல்பட வேண்டும்.

மேலும், மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு கூடுமானவரை இயந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போதிய இயந்திரங்கள் இல்லையெனில் அரசுக்கு அறிக்கை அனுப்பி தேவைப்படும் இயந்திரங்களை பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தற்சமயம் மனித கழிவுகளை அகற்றிட ஊழியர்களை பயன்படுத்தி வந்தால் அவர்களது ஊதியத்தில் எவ்வித நிலுவைத்தொகையும் பிடித்து வைத்தல் கூடாது. மேலும், அவர்களுக்கு தேவைப்படும் கையுறைகள், காலணிகள், உயிர் காக்கும் உபகரணங்கள் அனைத்தும் தரமானதாக வழங்கப்பபடுதல் வேண்டும்.

பாரத பிரதமரின் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் (புசழரி hழரளநள)  தகுதியுடைய மக்களுக்குதான் சென்றடைகின்றதா எனவும், வழங்கப்பட்ட பின் அவ்வீட்டின் உரிமையாளர்தான் வசீக்கின்றாரா? என அவ்வப்போது ஆய்வு செய்தல் வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அரசிடமிருந்து கிடைக்கப்பெறும் சலுகைகள் பற்றிய விபரத்தினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எந்ததெந்த வகையில் கொண்டு சேர்க்க முடியுமோ அத்தனை வகைகளையும் கையாண்டு அம்மக்களுக்கு சென்றடைய உதவிகரமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் என்.மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (பொள்ளாச்சி) காய்த்ரி கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) ச.மதுராந்தகி, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) சின்னசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வே.மோகன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...