கோவை மாநகரில் தலைக்கவசம் அணியாமல் செல்வதாக ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு: துணை ஆணையர் தகவல்

தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு அறிவித்தும் பலர் இந்த முறையை பின்பற்றாமல் இருக்கின்றனர். இதனால், சில நேரங்களில் உயிர்பலி ஏற்படுவது தவிர்கமுடியாததாகிறது.

என்னதான் காவல்துறையினர் வாகன தணிக்கை நடத்தி அபராதம் விதித்து வந்தாலும் இன்னும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களை கோவை மாநகர சாலைகளில் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதாக நாள் ஒன்றிற்கு ஆயிரம் வழக்குகள் பதியப்படுவதாக கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார்.



இது குறித்து துணை ஆணையர் துரை நமது சிம்ப்ளி சிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தலைக்கவசம் அணிவது குறித்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கோவை மாநகர போக்குவரத்து போலீசார் நடத்திவருகின்றனர். மேலும், ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்தி தலைகவசம் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் வசூலித்து வருகின்றனர்.

கோவையில் தற்போது 90 சதவிகித இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்கின்றனர். போலீசாரின் வாகன தணிக்கை மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகரில் நாள் ஒன்றிற்கு ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்:-

வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து நீதிமன்றம் மூலமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது அல்லது சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவகம் மூலம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

கோவை மாநகரில் கடந்த ஞாயிறு அன்று மட்டும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 175 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களுக்கும் சேர்த்து சராசரியாக 350 முதல் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...