கோவை மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதகாலமாக கட்டிட கட்டுமானத்தின் முக்கிய மூலப்பொருளான மணல் விலை அதிகரித்துள்ளது. இதைப்பயன்படுத்தி மணல் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தினர் சுமார் 20 மடங்குக்கு மேல் விலையை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கட்டுமானத்தொழிலார்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அவல நிலையை கண்டித்தும், நிவாரணம் வேண்டியும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசு மாதம் தலா 5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

இந்த அவல நிலையை கண்டித்தும், நிவாரணம் வேண்டியும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசு மாதம் தலா 5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.