பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 23ம் அன்று பணிகளைப் புறக்கணிக்க பாரதியார் பல்கலைக் கழக அலுவலர் சங்கம் முடிவு

தமிழ்நாடு அனைத்து பல்கலைக் கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தமிகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழக அலுவலர் சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூட்டமைப்பின் போராட்டத்தில் பாரதியார் பல்கலைக் கழக அலுவலர் சங்கம் கடந்த ஜூன் 21ம் தேதியன்று கருப்பு பட்டை அணிந்து முழுக்கப் போராட்டம் நடத்தியது. மேலும், ஜூன் 23ம் தேதியன்று பாரதியார் பல்கலைக் கழக நிரந்தர பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக் கூலிப் பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பணிகளைப் புறக்கணித்து அனைவரும் ஒட்மொத்த விடுப்பு எடுத்து பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது, தமிழக பல்கலைக் கழகங்களில் பணியாற்றுகின்ற அலுவலர்களின் பிரச்சனைகளை கலைவதற்கு எங்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்கும், அந்தந்த பல்கலைக் கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழுவிலும் ஆளுமை மன்றத்திலும் பணியாளர்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.

தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு தடையாக உள்ள அரசு கடிதத்தை திரும்பப் பெறப்பட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட உள்ளன.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...