கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்டர்னல் புகார் அமைப்பின் சார்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கே.வி.சுரேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவிதா ராஜகோபால் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "பெண்களின் முன்னேற்றத்தினைப் பொருத்தே சமூகத்தின் முன்னேற்றமும் அளவிடப்படுகின்றன" என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாசகத்தை நினைவுகூர்த்து உரையாற்றினார்.
தொடர்ந்து, பணியிடத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்புணர்வு குறித்தும், அதில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இன்டர்னல் புகார் அமைப்பின் (ஐசிசி) ரேனு தாமஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். ஐசிசி உறுப்பினர் மரியா யேசுராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவாக ஏ.விஜயசித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியினை ஐசிசி உறுப்பினர் பி.எஸ்.சாந்தினி ஒருங்கிணைத்து நடத்தினார். இதில், ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கே.வி.சுரேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவிதா ராஜகோபால் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "பெண்களின் முன்னேற்றத்தினைப் பொருத்தே சமூகத்தின் முன்னேற்றமும் அளவிடப்படுகின்றன" என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாசகத்தை நினைவுகூர்த்து உரையாற்றினார்.
தொடர்ந்து, பணியிடத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்புணர்வு குறித்தும், அதில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இன்டர்னல் புகார் அமைப்பின் (ஐசிசி) ரேனு தாமஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். ஐசிசி உறுப்பினர் மரியா யேசுராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவாக ஏ.விஜயசித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியினை ஐசிசி உறுப்பினர் பி.எஸ்.சாந்தினி ஒருங்கிணைத்து நடத்தினார். இதில், ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.