கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சுற்றுவட்டார குடியிருப்பு, விவசாய பகுதிகளில் நுழைவது வழக்கம்.
இந்த நிலையில், சிறுமுகை வனச்சரக வனத்துறையினர் கூத்தம் மண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அணையின் நீர்த்தேக்க பகுதி அருகே ஒரு காட்டு யானை கீழே விழுந்து எழும்ப முடியாமல் போராடிக் கொண்டிருந்துள்ளது. இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர், கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கீழே விழுந்த யானை 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை என தெரிய வந்தது. வயதானதால் தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் யானை தவறி கீழே விழுந்திருப்பதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அழித்து வந்தனனர். இதில், நேற்று சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் வனத்துறையில் தொடர்ந்து அந்த யானையினை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அந்த யானை உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தது. தொடர்ந்து, யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அதேப் பகுதியில் அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமுகை வனச்சரக வனத்துறையினர் கூத்தம் மண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அணையின் நீர்த்தேக்க பகுதி அருகே ஒரு காட்டு யானை கீழே விழுந்து எழும்ப முடியாமல் போராடிக் கொண்டிருந்துள்ளது. இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர், கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கீழே விழுந்த யானை 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை என தெரிய வந்தது. வயதானதால் தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் யானை தவறி கீழே விழுந்திருப்பதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அழித்து வந்தனனர். இதில், நேற்று சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் வனத்துறையில் தொடர்ந்து அந்த யானையினை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அந்த யானை உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தது. தொடர்ந்து, யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அதேப் பகுதியில் அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.