மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்கும் புதிய திட்டத்தினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அனைத்து மண்டல வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி செய்யும் குப்பைகளை வாரம் ஒரு முறை புதன் கிழமை மட்டும் தவறாது வாங்கவும் மற்றும் மற்ற நாட்களில் மக்கும் குப்பைகளை வாங்கவும் அனைத்து மண்டல துப்புரவு அலுவலர்கள், அனைத்து துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல வார்டு பகுதிகளிலும் மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி செய்யும் குப்பைகள் மட்டும் வாங்கப்பட்டது. தடாகம் ரோடு மற்றும் டி.வி.எஸ் நகர் பகுதியில் வார்டு எண். 6, மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி செய்யும் குப்பைகள் மட்டும் வாங்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கிழக்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 3.7 டன், மேற்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 8.4 டன், வடக்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 4.2 டன், தெற்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 7.9 டன், மத்திய மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 18.8 டன், ஆகமொத்தம் சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பைகள் 43 டன்.

இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தருவதற்கு வசதியாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும். இத்திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை வாரத்தில் ஆறு நாட்களுக்கும், மக்காத குப்பை புதன் கிழமைகளிலும் சேகரிக்கப்படும். இதன் மூலம் குப்பைகள் தரம் பிரித்தல், சேகரித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை அறிவியல் ரீதியாக நடத்தப்படும்.

ஆகவே, பொது மக்கள் அனைவரும் இப்புதிய திட்டத்திற்கு ஆதரவளித்து கோவை மாநகரை தூய்மையான மாநகராட்சியாக உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...