கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதியில் உள்ள மத்திய மண்டலம், வார்டு எண்- 80, ஆர்.ஜி வீதி மற்றும் தாமஸ் வீதியில் உள்ள பிளாஸ்டிக் சில்லரை மற்றும் மொத்த விற்பனைக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 50 மைக்ரான் அளவிற்கு குறைவாக இருந்த சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3000 ஆயிரம் கிலோ பாலித்தீன் பைகள் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடை உரிமையாளர்களிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது சுற்றுச் சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், பாலித்தீன் பைகள் வைத்திருந்ததன் காரணமாக ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.
அப்போது அங்கு 50 மைக்ரான் அளவிற்கு குறைவாக இருந்த சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3000 ஆயிரம் கிலோ பாலித்தீன் பைகள் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடை உரிமையாளர்களிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது சுற்றுச் சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், பாலித்தீன் பைகள் வைத்திருந்ததன் காரணமாக ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.