கடந்த ஜூன் 12ம் தேதியன்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் அனூப் மற்றும் ஷைனா ஆகியோரைப் பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழுவைச் சேர்ந்த ரஷீத் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் ஹரிஹர சர்மா ஆகியோர் வந்தனர்.

அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கைது செய்து மாவோயிஸ்டுகளுக்கு பென் டிரைவ் விநியோகித்ததாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பின், அந்த பென் டிரைவ்-யை கொடுத்தனுப்பியது கோவையில் பல வருடங்களாக மக்ககளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் எனவும், மேலும் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் செய்தித்தாள்களில் வதந்திகள் பரப்பப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாடு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கைது செய்து மாவோயிஸ்டுகளுக்கு பென் டிரைவ் விநியோகித்ததாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பின், அந்த பென் டிரைவ்-யை கொடுத்தனுப்பியது கோவையில் பல வருடங்களாக மக்ககளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் எனவும், மேலும் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் செய்தித்தாள்களில் வதந்திகள் பரப்பப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாடு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.